நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்

இந்த உலகத்தில் அரசியலிலும் மற்றும் ஒவ்வொரு துறைகளிலும்,  பலர் அதிகாரத்தில் இருப்பவர்களாகவும் ஆளுகிறவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களால் மக்களுக்கு உபாத்திரமேயன்றி வேறொன்றும் இல்லை, அதனால் தான் நம்மை நேசித்த தேவன், தன்னுடைய ஒரே பேரான குமாரனையே நமக்கு தலைவராகவும் அதிபதியாகவும் தந்திருக்கிறார், அது எவ்வளவு பெரிய பாக்கியம் - இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன் - ஏசாயா 55:4



இது தேவனுடைய ஈவு என்றே சொல்லவேண்டும், இப்படி நம் ஒவ்வொருத்தருக்கும் கர்த்தரே தலைவராகவும் அதிபதியாகவும் இருக்கவேண்டும் என்பதே நம்முடைய விண்ணப்பமாகவும், அதற்காக உழைப்பதே நம்முடைய ஊழியமாகவும் இருக்க வேண்டும் - 9.நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;  10.உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 11.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 12.எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 13.எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே - மத்தேயு 6:9-13 



தேவனுடைய சித்தம் இப்படியிருக்க, ஒருவேளை நம்மை தலைவராக காட்டிக்கொள்வோம் என்றால், அது தேவனுக்கு எதிர்த்து செயல்படும் காரியமாக தான் இருக்கும், இதை தான் கர்த்தர் தன்னுடைய சீஷர்களுக்கு இப்படிச் சொல்லிக் கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:8-12


யோவானுடைய தூதர்கள் போனபின்பு

இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு போகும் முன்பு, தன்னுடைய சீஷர்களுக்கு பிரத்தியட்சமாக செய்த  உபதேசம், ஒரு நீண்ட போதனையாக யோவான் 13, 14, 15, 16, 17ம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது, இது கர்த்தர் தன்னுயுடைய சீஷர்களில் ஒருவனான யூதாஸ்காரியோத் தன்னை விட்டு போகும் வரை காத்திருந்து, அவன் போனபின்பே போதித்தார் என்று பார்க்கிறோம், இதற்கு காரணம் யூதாஸ்காரியோத்தின் நம்பிக்கை துரோகமே - 21.இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். 22.அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 23.அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24.யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25.அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். 26.இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். 27.அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். 28.அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. 29.யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். 30.அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது. 31.அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார் - யோவான் 13:21-31



அதைப் போலவே, இங்கு யோவானுடைய தூதர்கள் போகும் வரை காத்திருந்து, அவர்கள் போன பின்பு, மேசியாவாகிய தன்னை குறித்த தீர்க்கதரிசனங்களை, அதாவது யேகோவா தேவனாகிய தான் வனாந்தரத்திலிருந்து தான் வரவேண்டும் என்கிற தீர்க்கதரிசனங்களை விளக்கிச் சொன்னார் - 11.மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். 12.அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். 13.கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, 14.கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 15.மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். 16.எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 17.இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று. 18.இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, 19.நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். 20.அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். 21.அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார். 22.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 23.என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 24.யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 25.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 26.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27.இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான் - லூக்கா 7:11-27



அதை ஏன் யோவானுடைய தூதர்கள் போகும் வரை காத்திருந்து பின்பு சொன்னார்? ஏனென்றால்,  இந்த உலக மனிதர்களை தங்களின் குருவாக, ராஜாவாக வைத்துக் கொள்வர்கள் கர்த்தரின் பார்வையில் யூதாஸ்காரியோத்துகளாகவே இருக்கிறார்கள்.


குருவாய் இருந்த யோவான்


உலக மனிதர்களை தங்களின் குருவாக வைத்துக் கொள்வர்களே, கர்த்தரின் பார்வையில் யூதாஸ்காரியோத்துகளாக இருப்பார்களானால், மற்றவர்களுக்கு குருவாக இருக்க நினைப்பது எவ்வளவு ஆபத்தானது, அதைத்தான் இந்த யோவானின் வாழ்க்கையும் நமக்கு பாடமாக சொல்லுகிறது. பின் சொல்லப்பட்ட வசனங்களிலிருந்து, யோவான் ஒரு குருவைப் போல இருந்ததையும், அவருக்கு பல சீஷர்கள் இருந்ததையும் அறிந்து கொள்ளலாம், இது கர்த்தருக்கு விரோதமான காரியம்தான், ஏனென்றால் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளைகளில் ஒன்று நீங்கள் குரு என்று அழைக்கப்படாதிருங்கள் என்பதாகும், மேலும் இந்த யோவானுடைய சீஷர்களை கிறிஸ்துவுக்கு எதிராய் செயல்பட்ட  பரிசேயருடைய சீஷர்களுக்கு ஒப்பாகவே வேதாகமம் பார்க்கிறது - 18.யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள். 19.அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. 20.மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். 21.ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 22.ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார் - மாற்கு 2:18-22


தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்

கர்த்தருக்கு ஞானஸ்நானம் கொடுத்த பின்பு, பரமதேவனாகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றாமல், பல சீஷர்களை வைத்துக்கொண்டு யோவான் கொடுத்த வந்த ஞானஸ்நானம், சாலேமின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவினாலுண்டாகும் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின் படி இல்லாமல்,  சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே "தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்" கொடுத்த ஞானஸ்நானமாகவே இருந்தது, அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லையே - 23.சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்:: ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24.அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை - யோவான் 3:23-24


இதை எளிதாய் புரிந்துக் கொள்ள, ஒருவர் யோவானிடம், கிறிஸ்துவை உலகுக்கு அறிமுகப்படுத்தின பின்பும் ஏன் ஞானஸ்நானம் கொடுக்குறீர்? என்று கேட்டால், அதற்கு யோவான் " தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்" கொடுக்கிறேன் என்று அவர் பதில் இருக்குமாம், மேலும் கிறிஸ்துவை உலகுக்கு அறிமுகப்படுத்தின பின்பும் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவ சித்தம் இல்லாததாய் இருந்ததை, அப்போஸ்தலனாகிய யோவான், அவர் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை[For John had not yet been thrown into prison-John 3:24] அதனால் ஞானஸ்நானம் கொடுத்தார் என்றும் எழுதியுள்ளார்


பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில்

அதே சமயத்தில், பவுல் தன்னுடைய ஊழியத்தில் யாரையுமே சீஷர்களாக வைத்துக் கொள்ளவில்லை, அதனால் கர்த்தர் பவுலின் ஊழியத்தில் பெரிய அற்புதங்களை செய்தார் என்று பார்க்கிறோம், இருந்த போதிலும் சிலர் கிறிஸ்துவுக்கும் தங்களுக்கும் இடையே, ஒரு பாலமாக பவுலை வைத்துக்கொள்ள முயற்சி செய்த பொழுது, அது அவர்களுக்கு ஆபத்தாகவே முடிந்தது - 11.பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். 12.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. 13.அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14.பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். 15.பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16.பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். 17.இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது - அப்போஸ்தலர் 19:11-17