நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைக்கிற நம்பிக்கையே நாம் அவரை நேசிப்பதின் அடையாளமாகவும், கர்த்தரை நம்மோடு கிட்டி சேர்ப்பதாகவும் இருக்கிறது - விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் - எபிரெயர் 11:6
மறைந்து போனார்
இயேசு கிறிஸ்து விசுவாசத்தின் முக்கியத்தை வெளிப்படுத்திய விதம் இன்னும் ஆச்சரியமாகவேயுள்ளது, எப்பயென்றால் தன்னை விசுவாசிக்காத திரள் கூட்டத்தாரின் மத்தியிலிருந்து கர்த்தர் மறைந்து போனார் என்று பார்க்கிறோம் - 35.அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். 36.ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். 37.அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை - யோவான் 12:35-37
மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று
ஆனால் அதே சமயத்தில், கர்த்தருக்காக ஏங்கி நின்ற ஒரு ஸ்திரீயினிமித்தம், கர்த்தரால் மறைய கூடாமல் போய் விட்டதாம் - 24.பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. 25.அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். 26.அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள் - மாற்கு 7:24:26
கர்த்தர் அந்த ஸ்திரீயினிமித்தம், கலிலேயாவிலிருந்து தீரு சீதோன் வரை சென்று மறுபடியும் தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய் கலிலேயா வர ஏறக்குறைய 175 கிமீ தூரம் நடக்க வேண்டும், மேலும், அந்த பயணத்தில் கர்த்தர் சந்தித்த ஒரே நபர் யாரென்றால் சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய அந்த கிரேக்க ஸ்திரீ மாத்திரமே, அப்படியென்றால் அந்த ஸ்திரீயின் விசுவாசம் தான் இயேசு கிறிஸ்துவை அவ்வளவு தூரம் நடக்க வைத்தது, அப்படியென்றால் நம் விசுவாசம் தேவனுடைய பார்வையில் எவ்வளவு விலையேறப் பெற்றதாய் இருக்கிறது - 7.அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 8.அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, 9.உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள் - I பேதுரு 1:7-9